மேலும் செய்திகள்
காயலான் கடையில் தீ
28-Aug-2025
மின் சாதன பொருட்கள் பழுதுபார்ப்பு கடையில் தீ
08-Sep-2025
துரைப்பாக்கம், :பெருங்குடியில் ஏற்பட்ட தீ விபத்தில் ௧௦௦க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் எரிந்து நாசமாயின. பெருங்குடி, எம்.ஜி.ஆர்., சாலையில் மூன்று மாடி கொண்ட வணிக கட்டடம் உள்ளது. இதில், சைக்கிள், எலக்ட்ரிக்கல், மெக்கானிக் கடைகள் செயல்படுகின்றன. நேற்று மாலை, திடீரென மாடியில் செயல்படும் சைக்கிள் கடையில் தீ பிடித்தது. அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரும், அலறியடித்து கடையை விட்டு வெளியேறினர். தகவலறிந்து வந்த துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்கும் 100க்கும் மேற்பட்ட சைக்கிள்கள் தீயில் எரிந்தன. துரைப்பாக்கம் போலீசாரின் விசாரணையில், மின் கசிவு காரணமாக தீப்பிடித்தது தெரிந்தது.
28-Aug-2025
08-Sep-2025