பிரேயர் கோப்பை டி - 20 கிரிக்கெட் கிரீன் பீல்டு சி.ஏ., அணி முன்னிலை
சென்னை, லிட்டில் மாஸ்டர்ஸ் கிரிக்கெட் அகாடமி சார்பில், பிரேயர் கோப்பைக்கான யு - 16 கிரிக்கெட் போட்டிகள், புழல் பகுதியில் நடக்கின்றன.கிளப் அணிகளுக்கு இடையிலான இப்போட்டியில், மொத்தம் ஐந்து அணிகள், தலா நான்கு போட்டிகள் வீதம் மோதி வருகின்றன.அதன்படி, நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில், கிரீன் பீல்டு சி.ஏ., அணி, 25 ஓவர்களில், ஆறு விக்கெட் இழப்புக்கு, 186 ரன்களை அடித்தது. அணியின் வீரர்கள் சஞ்சய், 55, ரோஷன், 48, ரன்கள் அடித்தனர்.அடுத்து பேட்டிங் செய்த பத்ம சாரங்கபாணி சி.ஏ., அணி, 25 ஓவர்களில், ஏழு விக்கெட் இழப்புக்கு, 157 ரன்களை அடித்து, 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.நேற்று காலை நடந்த முதல் போட்டியில், கிரீன் பீல்டு சி.ஏ., மற்றும் லிட்டில் மாஸ்டர்ஸ் சி.ஏ., அணிகள் எதிர்கொண்டன.முதலில் பேட்டிங் செய்த கிரீன் பீல்டு அணி, 24.1 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 125 ரன்களை அடித்தது.அடுத்து களமிறங்கிய லிட்டில் மாஸ்டர்ஸ் அணி, 20.2 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 127 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.அணியின் விஷ்வஜித், 86 ரன்களை அடித்து வெற்றிக்கு கை கொடுத்தார். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.இதுவரை நடந்த அனைத்து ஆட்டங்களிலும், கிரீன் பீல்டு அணி, நான்கில் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்று, ஆறு புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது.தொடர்ந்து, நாதெல்லா சி.ஏ., அணி, இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று, நான்கு புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது.