உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மும்பையில் கனமழை விமான சேவை பாதிப்பு

மும்பையில் கனமழை விமான சேவை பாதிப்பு

சென்னை,மும்பையில் கனமழை பெய்து வருவதால், சென்னையில் இருந்து அங்கு செல்ல வேண்டிய விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மும்பையில் இருந்து நேற்று மாலை 5:35 மணிக்கு சென்னை வர வேண்டிய மற்றும் சென்னையில் இருந்து மாலை 6:20 மணிக்கு மும்பை புறப்படும் 'இண்டிகோ' விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மும்பைக்கு அதிகாலை 5:10 மணி, காலை 8:55 மணிக்கு இயக்கப்படும் 'இண்டிகோ' விமானங்களும், காலை 9:35, மாலை 3:00 மணிக்கு இயக்கப்படும் 'ஏர் இந்தியா' விமானங்களும், இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. விமான நிறுவனங்கள் இது குறித்து பயணியருக்கு தகவல் தெரிவித்து, மாற்று விமானத்தில் அனுப்பி வைத்ததாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை