உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாரதி நேரு கலைவிழா போட்டி பங்கேற்க மாணவருக்கு அழைப்பு

பாரதி நேரு கலைவிழா போட்டி பங்கேற்க மாணவருக்கு அழைப்பு

திருவொற்றியூர், பாரதி பாசறையின் 40ம் ஆண்டு, பாரதி நேரு தேசியக் கலைவிழா போட்டிகளில் பங்கேற்க மாணவ - மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கலை விழா போட்டிகள், நவ., 30 ம் தேதி மதியம், தேரடி, மாங்காடு எல்லப்ப செட்டியார் திருமண மாளிகையில் நடக்கிறது. பாரதியார், பாரதிதாசன், கவிமணி, நாமக்கல் கவிஞர் பாடல்கள் தலைப்பில், 1 - 5ம் வகுப்பு மாணவ - மாணவியர், மூன்று நிமிடம் இசைப் போட்டியில் பங்கேற்கலாம்.'மழை வெள்ளம் பாதிப்பும் - மழைநீர் சேமிப்பும்' என்ற தலைப்பில், 6 - 8ம் வகுப்பு மாணவருக்கு ஓவிய போட்டியும், 'வல்லரசு ஆகும் பாரத தேசம்' என்ற தலைப்பில், 9 - 10ம்வகுப்புகளுக்கு பேச்சுப் போட்டியும் நடக்கிறது. 'போரிடும் உலகை வேரோடு சாய்ப்போம்' என்ற தலைப்பில், 11 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை போட்டி நடக்கிறது.போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்களின் பட்டியலை, கல்வி நிறுவனங்கள், நவ., 25 ம் தேதிக்குள், தலைமை ஆசிரியரின் கையொப்பத்துடன், துாதஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.அனுப்ப வேண்டிய முகவரி, மா.கி.ரமணன் - செயலர், பாரதி பாசறை, எண். 39/13, கிராமத்தெரு, சோமசுந்தரம் நகர், 4வது தெரு, திருவொற்றியூர், சென்னை - 19. விபரங்களுக்கு, 94441 82153, 94442 98396, 93810 41157 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை