ஐ.டி., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை, பணி நீக்கம் செய்வதை எதிர்த்து, ஐ.டி., நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 'யுனைட்' என்ற ஐ.டி., ஊழியர்கள் சங்கம் சார்பில், டி.சி.எஸ்., நிறுவனத்தில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதை எதிர்த்து, நேற்று திருவான்மியூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.