உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நிலத்தை அளக்க விடாதவர் கைது

நிலத்தை அளக்க விடாதவர் கைது

வடபழனி,நிலத்தை அளக்க விடாமல் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். வடபழனி பகுதியைச் சேர்ந்தவர் குமார், 59. இவர் 'போட்டோ டிஜிட்டல் கலர்லேப்' நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம், வடபழனி விவேகானந்தா காலனி, 100 அடி சாலை அருகே உள்ளது. இந்த இடத்தை அளப்பதற்கு, நேற்று முன்தினம் சர்வேயரை அழைத்து சென்றார். அப்போது, நிலத்தை அளக்க விடாமல் ரமேஷ் , 46, என்பவர் தகராறு செய்து, குமாரை தகாத வார்த்தைகளால் பேசி, கையால் தாக்கி கொ லை மிரட்டல் விடுத்தார். விசாரித்த வடபழனி போலீசார், சாலிகிராமத்தைச் சேர்ந்த ரமேைஷ கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை