நீதிபதி காலி பணியிடம் நிரப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பாரிமுனை: சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிக்கான காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜனநாயக வழக்கறிஞர் சங்கம், சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம், ஆல் இந்தியா லாயர்ஸ் கவுன்சில், இந்திய வழக்கறிஞர் சங்கம் இணைந்து, ஆவின் நுழைவாயில் முன் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 80க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உயர் நீதிமன்றத்தில், காலியாக உள்ள 20 நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; தகுதி அடிப்படையில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.