அழுகிய ஆண் சடலம் மீட்பு
படப்பை, படப்பை அருகே, சாலமங்கலம் எம்.ஜி.ஆர்., தெருவில் வசிப்பவர் கவியரசன், 38; கொத்தனார். மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், இவரது மனைவி, குழந்தைகளுடன் தனியாக சென்றுவிட்டார். தனியாக வசித்த நிலையில், கவியரசன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது கவியரசன் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. மணிமங்கலம் போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.