உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வீடு தாமதமானதால் ரூ.5 லட்சம் இழப்பீடு

 வீடு தாமதமானதால் ரூ.5 லட்சம் இழப்பீடு

சென்னை: பெரும்பாக்கம் பகுதியில் செலைன் எஸ்டேட்ஸ் நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. அந்த திட்டத்தில் வீடு வாங்க, மதுகர் நந்திகம் என்பவர் ஒப்பந்தம் செய்தார். இதற்காக அவர், 41.19 லட்ச ரூபாயை செலுத்தியுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில், 2019ல் வீட்டை ஒப்படைப்பதாக, கட்டுமான நிறுவனம் தெரிவித்து இருந்தது. ஆனால், குறிப்பிட்ட காலத்தில் அந்நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை. இது குறித்து, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் மதுகர் நந்திகம் புகார் செய்தார். இந்த புகார் தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில், மனுதாரருக்கு கட்டுமான நிறுவனம் குறித்த காலத்தில் வீட்டை ஒப்படைக்காதது உறுதியாகிறது. எனவே, மனுதாரருக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு, வழக்கு செலவுக்காக, 25,000 ரூபாயை கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை