உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.80.86 லட்சம் அபராதம்

விதிமீறிய வாகனங்களுக்கு ரூ.80.86 லட்சம் அபராதம்

ஆலந்துார்,கடந்த ஓராண்டு நடந்த வாகன சோதனையில் விதிமீறிய வாகனங்களுக்கு, 80.86 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் தெரிவித்துள்ளது.சென்னை, மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஓராண்டாக ஆர்.டி.ஓ., சுந்தரமூர்த்தி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், அதிக வேகம், அதிக பாரம், மொபைல் போனில் பேசியபடி வருவது, மது அருந்தி வாகனம் ஓட்டுதல், 'சீட் பெல்ட்' அணியாமல் நான்கு சக்கர வாகனங்கள் இயக்குவது உள்ளிபட, விதிமுறை மீறிய 944 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.அந்த வாகனங்களிடம் இருந்து, 80.86 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், வாகன வரியாக 1.11 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலகம் இத்தகவலை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ