உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சி கமிஷனராக சரண்யா பொறுப்பேற்பு

மாநகராட்சி கமிஷனராக சரண்யா பொறுப்பேற்பு

ஆவடி:ஆவடி மாநகராட்சி கமிஷனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சரண்யா பொறுப்பேற்றார்.ஆவடி மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய வந்த கந்தசாமி, ஈரோடு கலெக்டராக மாற்றப்பட்டதையடுத்து, கடலுார் மாவட்ட சப் - கலெக்டராக பணியாற்றி வந்த சரண்யா, ஆவடி மாநகராட்சி புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று, கமிஷனராக சரண்யா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், 2020ம் ஆண்டு யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்றவர். ஆவடி மாநகராட்சியின், 10வது கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ