உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விளையாட்டு செய்தி அகில இந்திய அளவிலான கிரிக்கெட் தொடர் காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணி இரண்டாமிடம் 

விளையாட்டு செய்தி அகில இந்திய அளவிலான கிரிக்கெட் தொடர் காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணி இரண்டாமிடம் 

காஞ்சிபுரம்,: கோவா மாநிலம், சவந்த்வாடி நகரில் ஜன., 28 முதல், பிப் 3 வரை அகில இந்திய அளவிலான, கோவா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் போட்டி நடந்தது.இதில், தமிழ்நாடு, மஹாராஷ்டிர, கர்நாடகா, கோவா, டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து கிரிக்கெட் அணிகள் பங்கேற்று மோதின.இறுதி போட்டிக்கு கோவா அணியும், நம் தமிழகத்தின் காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணியும் தேர்வாகி மோதின. இதில் கோவா அணி வெற்றி பெற்றது. இரண்டாம் இடத்துக்கான கோப்பையுடன், போட்டி நடுவர்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட தொடரின் ஒழுக்கமான் அணி என்கிற சிறப்பு பரிசையும், காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணி வென்றது,இத்தொடரில் பங்கேற்ற, காஞ்சிபுர் அணி வீரர்களுக்கு புதிய சூழ்நிலையில், புதிய அணிகளுடன் விளையாடிய சிறந்த அனுபவத்தை கொடுத்ததாக பரிசளிப்பு விழாவில் பங்கேறற காஞ்சி கிரிக்கெட் பயிற்சியாளர் வினோத்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி