உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவில் உண்டியலில் திருட்டு

கோவில் உண்டியலில் திருட்டு

சேலையூர், தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில், ஸ்ரீபிடாரி செல்லியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலை வந்து பார்த்தபோது, கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.கோவிலின் உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ