உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நகரும்படி பழுதால் திருமங்கலத்தில் அவதி

நகரும்படி பழுதால் திருமங்கலத்தில் அவதி

திருமங்கலம்:அண்ணா நகர் மண்டலம், 104வது வார்டில், திருமங்கலம் 100 அடி சாலையில், பொதுமக்கள் சாலையை கடப்பதற்கான, இருபாதைகளிலும் நடைமேம்பாலத்துடன் நகரும்படிகள் அமைக்கப்பட்டன. நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பில் உள்ள இதை தற்போது, தனியார் நிறுவனம் பராமரித்து வருகிறது. இதற்கு ஒரு பாதுகாவலர் உள்ளார்.இங்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் நகரும்படிகள் இயக்கப்படுகிறது. இதனால், காலையும் மாலையும் அப்பகுதியை ேசர்ந்தோர் பயனடைந்து வந்தனர்.முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து உள்ளதால், திருமங்கலம் - பாடி செல்லும் பாதையில் உள்ள நகரும்படி முழுதும், குப்பை குவிந்து கிடக்கிறது.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கடந்தாண்டு பெய்த மழையால் பழுதான நகரும்படிகளை, முறையாக சீரமைக்கவில்லை. இச்சாலையில் ஏற்கனவே மெட்ரோ பணிகள் நடப்பதால், சாலை கடக்க முடியாதப்படி, பாதை முழுதும் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை