உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாங்காடு காமாட்சி கோவிலில் தெப்பத் திருவிழா விமரிசை

மாங்காடு காமாட்சி கோவிலில் தெப்பத் திருவிழா விமரிசை

குன்றத்துார், மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தெப்பத் திருவிழா நடக்கும். இந்தாண்டு தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. மாலை 6:30 மணிக்கு வெள்ளீஸ்வரர் தெப்பத்தில் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி கோவில் குளத்தில் வலம் வந்தார். இரவு 8:30 மணிக்கு யானை வாகனத்தில் காமாட்சி அம்மன் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை