உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நகை பறித்து சென்றதாக நாடகமாடிய இளைஞர்

நகை பறித்து சென்றதாக நாடகமாடிய இளைஞர்

குன்றத்துார், குன்றத்துார், திருமலை நகரை சேர்ந்தவர் விஜய், 26. தனியார் ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார்.அப்போது, சாலையோரம் தனியாக நின்று போன் பேசிக்கொண்டிருந்த போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், தன்னை தாக்கி, 2 சவரன் செயினை பறித்து சென்றதாக புகார் அளித்தார்.குன்றத்துார் போலீசார் விஜயிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.தொடர்ந்து விசாரித்ததில், தன் நண்பரிடம் இருந்து 2 சவரன் நகையை வாங்கிய விஜய், அதை அடமானம் வைத்துள்ளார்.நகையை திருப்பி கொடுக்க முடியாததால், மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றுவிட்டதாக நாடகமாடியது தெரிய வந்தது. விஜயை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ