உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்சோ வழக்கில்  தொழிலாளிக்கு 20 ஆண்டுசிறை !

போக்சோ வழக்கில்  தொழிலாளிக்கு 20 ஆண்டுசிறை !

கோவை:போக்சோ வழக்கில், கூலி தொழிலாளிக்கு, 20 ஆண்டுசிறை தண்டனை விதிக்கப்பட்டது.கோவை, ஆவாரம்பாளையம், நேதாஜி நகரை சேர்ந்தவர் அந்தோணி,55; கூலி தொழிலாளியான இவர், ஏழு வயது சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டார். புகாரின் பேரில், பேரூர் அனைத்து மகளிர் போலீசார், கடந்த 2021, ஏப்., 3 ல், அந்தோணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது, கோவையிலுள்ள முதன்மை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட அந்தோணிக்கு, 20 ஆண்டு சிறை, 15,000 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு தரப்பில், ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. .....


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை