உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அழுகிய நிலையில் சடலம்; போலீசார் தீவிர விசாரணை

அழுகிய நிலையில் சடலம்; போலீசார் தீவிர விசாரணை

நெகமம் : நெகமம், மெட்டுவாவியில் அடையாளம் தெரியாத ஆண் இறந்து கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.நெகமம், மெட்டுவாவியில், தனியார் இடத்தில், அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அழுகிய நிலையில் இருந்த சடலத்தை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.அங்கிருந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. மேமுலும், இறந்தவர் யார் என்பது குறித்து தெரியவில்லை.இந்நிலையில், கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்திலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ