உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் நான்கு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு

கோவையில் நான்கு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு

கோவை;கோவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு, லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது என்று, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.அதன்படி, இன்று 32 மி.மீ., நாளை 4 மி.மீ., 15ம் தேதி 10 மி.மீ., 16ம் தேதி 8 மி.மீ., 17ம் தேதி 5 மி.மீ., மழை பதிவாக வாய்ப்புள்ளது. வரும் நாட்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 முதல் 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும். காலை நேர காற்றின் ஈரப்பதம் 90 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 70 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது. சராசரியாக காற்று மணிக்கு, 16 முதல் 22 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். பெரும்பாலும் தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும்.வரும் 4 நாட்களுக்கு, மேற்கு மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தூறல் அல்லது லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.எதிர்பார்க்கப்படும் மழையை பயன்படுத்தி, 18 முதல் 22 நாட்களான நான்கு இலை வயதில் உள்ள நெல் நாற்றுகளை நடவு செய்யலாம். வெங்காயத்தில் இலைப்பேன் தாக்குதல் தென்பட்டால், ஒரு லிட்டர் நீரில் பிப்ரோனில் ஏக்கருக்கு 75 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி