உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை

மழை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, ஆர்.சி., சர்ச் வணிக வளாக கடை உரிமையாளர்கள் சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மழை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை நடந்தது.கோவை துடியலுார் அருகே, பொண்ணுாத்தம்மன் மலை சிவனடியார் ஸ்ரீ ராஜ மகரிஷி சுவாமி, பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு ஆர்.சி., சர்ச் பங்கு தந்தை ஜேக்கப் அடிகளார் ஆகியோர் பங்கேற்று, விழாவை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, பாலக்காடு ரோட்டில், சர்ச் வணிக வளாகம் முன்பாக, 15 மரக்கன்றுகள் நடப்பட்டன. மழை வேண்டி கூட்டுப்பிரார்த்தனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ