உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செவ்வாழை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

செவ்வாழை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

கிணத்துக்கடவு, ;கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ள நிலையில், செவ்வாழை கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்பட்டது.கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், தனிப்பயிராகவும், தென்னையில் ஊடுபயிராகவும் வாழை பயிரிடப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு, ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.தினசரி மார்கெட்டில், நேற்று செவ்வாழை (ஒரு கிலோ) --- 80 ரூபாய்க்கு விற்பனையானது. நேந்திரன் கிலோ - - 40, ரஸ்தாளி --- 45, பூவன் --- 30, கதளி --- 35, சாம்பிராணி வகை --- 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.கடந்த வாரத்தை விட, செவ்வாழை கிலோ -- 20, ரஸ்தாளி மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் -- 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. நேந்திரன் மற்றும் பூவன் --- 15, கதளி --- 5 ரூபாய் விலை குறைந்துள்ளது.வியாபாரிகள் கூறியதாவது, சென்ற வாரத்தை விட, வாழைத்தார்கள் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு சில ரக வாழைத்தார்கள் விலையும் அதிகரித்துள்ளது. வியாபாரிகள் எண்ணிக்கையும் அதிகமாக இருந்ததால், வாழைத்தார் விரைவாக விற்பனையானது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை