உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கடவுளே... தி.மு.க., அரசுக்கு நல்ல புத்தியைக் கொடு கோவை கோனியம்மனிடம் இந்து முன்னணி வேண்டுதல்

கடவுளே... தி.மு.க., அரசுக்கு நல்ல புத்தியைக் கொடு கோவை கோனியம்மனிடம் இந்து முன்னணி வேண்டுதல்

கோவை:ஹிந்து விரோத தி.மு.க., அரசுக்கு நல்ல புத்தியைக் கொடு என, இந்து முன்னணியினர் மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், கோவை கோனியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, சுப்பிரமணியம், நிருபர்களிடம் கூறியதாவது:வங்கதேசத்தில் மாணவர்கள் போராடி வருகின்றனர். அது அவர்கள் உரிமை. ஆனால், இதைப் பயன்படுத்தி, ஹிந்துக்களின் வீடு, கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ஹிந்துப் பெண்கள் நிர்வாணம் செய்யப்படுகின்றனர்; பலாத்காரம் செய்யப்படுகின்றனர். ஹிந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு உலகம் முழுக்க கண்டனம் எழுந்துள்ளது. லண்டனில் கண்டனப் பேரணி நடத்தியுள்ளனர். அமெரிக்காவும் கண்டித்துள்ளது. இந்து முன்னணி சார்பில், வங்கதேச ஹிந்துக்களுக்கு ஆதரவாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, காவல் துறையிடம் அனுமதி கேட்டோம். மறுத்துவிட்டனர். அங்குள்ள மக்கள், நமது மத்திய அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசு அவர்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பலமுறை தடையை மீறி, ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறோம். ஆனால், ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து, இம்முறை நீதிமன்றம் சென்று அனுமதி பெறுவதற்காக ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைத்துள்ளோம். ஹிந்து விரோத தி.மு.க., அரசுக்கு, நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என, கோனியம்மனை வேண்டிக் கொண்டுள்ளோம். திருப்பூரில் தேசியக்கொடி ஏந்திய பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளனர். தி.மு.க., அரசு தனது அராஜகப் போக்கை கைவிட வேண்டும்.தமிழகத்தில் போதைப்பழக்கம் அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சதீஷ், மாவட்ட செய்தித் தொடர்பாளர் தனபால் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி