உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிறப்பு வார்டு

அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிறப்பு வார்டு

மேட்டுப்பாளையம்;வெப்ப அலையால் ஏற்படும், 'ஹீட் ஸ்ட்ரோக்' பிரச்னைக்காக, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு துவங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜா கூறியதாவது:வெப்பத்தால், திடீர் உடல் நல குறைவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 4 பெட்களுடன் சிறப்பு வார்டு துவங்கியுள்ளோம். இந்த சிறப்பு வார்டில் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்படுவோருக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தயார் நிலையில் வைத்துள்ளோம். மேலும் மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள், பொதுமக்களுக்கு, உப்பு -சர்க்கரை கரைசலான ஓ.ஆர்.எஸ்.,குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை