உள்ளூர் செய்திகள்

காய்கறி விலை உயர்வு

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு வட்டத்தில், காய்கறி விலை அதிகரிப்பால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு வட்டத்தில் உள்ள விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய, இங்குள்ள தினசரி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இங்கு காய்கள் உடனுக்குடன் விற்பனை ஆவதால், விவசாயிகள் இதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.கடந்த பத்து நாட்களுக்கு முன் இருந்த, காய்கறி விலையை விட தற்போதய விலை, 10 முதல் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், காய்கறி வரத்தும் குறைவாக இருந்ததால், உடனுக்குடன் விற்பனை ஆனது.இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் நடவு செய்யப்பட்ட செடிகளில் இருந்து, ஏப்ரல் மாதம் வரை வரத்து இருந்தது.ஆனால், தற்போது வரத்து கணிசமாக குறைந்து வருவதால், காய்கறி விலை உயர தொடங்கியது. மேலும், கோடை மழை தற்போது வரை இல்லை. இதே நிலை தொடர்ந்தால், இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.விலை குறைய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ