உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குளத்தில் களப்பணி மேற்கொள்ள அழைப்பு

குளத்தில் களப்பணி மேற்கொள்ள அழைப்பு

கோவில்பாளையம், குளத்தில் களப்பணி மேற்கொள்ள, ஆர்வமுள்ளோர் பங்கேற்கலாம் என அழைப்பு விடப்பட்டுள்ளது.கோவில்பாளையம் அருகே, 125 ஏக்கர் பரப்பளவு கொண்ட காலிங்கராயன் குளத்தில், காலிங்கராயன் குளம் பாதுகாப்பு அமைப்பு மற்றும் கவுசிகா நீர் கரங்கள் சார்பில், களப்பணி நடந்து வருகிறது. 218வது வாரமாக இன்று காலை 7:00 முதல் 9:30 மணி வரை நடக்கும் களப்பணியில், ஆர்வமுள்ளோர் பங்கேற்கலாம் என அழைப்பு விடப்பட்டுள்ளது.அக்ரஹார சாமக்குளம் ஊராட்சியில், 165 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம், எல்லப்பாளையத்தில், 65 ஏக்கர் பரப்பளவு உள்ள ஆவாரம்குளம், அன்னுார் பேரூராட்சியில், 45 ஏக்கர் பரப்பளவு அல்லிகுளம் ஆகியவற்றிலும், இன்று காலை நடக்கும் களப்பணியில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்