உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகிழ்ச்சி கடலில் பயணிக்கிறது போட் சிலிர்க்கிறார் இயக்குனர் சிம்புதேவன்

மகிழ்ச்சி கடலில் பயணிக்கிறது போட் சிலிர்க்கிறார் இயக்குனர் சிம்புதேவன்

நடிகர் வடிவேலு நடித்த, 'இம்சை அரசன் 23ம் புலிதேவன்' வாயிலாக, 'கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க...' என்று, பல ஆண்டுகளுக்கு முன் அழைத்தவர் சிம்புதேவன். திரைப்படத்தை பார்த்தவர்கள் எல்லாம், சிரித்து உருண்டனர். இதற்கு பிறகு, அறை எண் 305ல் கடவுள், இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், புலி என, வேறு பாதையில் பயணிக்க துவங்கினார்.இவரது சமீபத்திய 'போட்' பயணம், மகிழ்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.அந்த மகிழ்ச்சியோடு, கோவையில் ஒரு கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், இவரும், படத்தில் நடித்த சிலரும் பங்கேற்றனர்.''கடலில் படம் பிடிப்பது, ஒரு சவாலான காரியம் தான். பத்து பேர் பயணிக்கக் கூடிய சிறிய படகில் கதை நடக்கிறது. படக்குழுவினர் மற்றொரு படகில் இணையாக நிறுத்தப்பட்டனர். கேமராவை எப்படி அமைத்தாலும், அது அசைந்து கொண்டே இருக்கும். அதற்கு மேல், எங்கள் யாருக்கும் நீச்சல் தெரியாது. இதையெல்லாம் தாண்டி, மறக்க முடியாத அனுபவமாக படம் அமைந்திருக்கிறது.இந்த திரைப்படம் எடுக்க, நிறைய தடைகளை கடந்து வந்தோம். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், பெரிதும் உறுதுணையாக இருந்தனர்,'' என்று பேசினார் சிம்புதேவன்.நடிகை கவுரி கிஷன் பேசுகையில், '' நான் நடித்த '96' படத்துக்கு பின், நிறைய வித்தியாசமான படங்கள் அமைகின்றன. இப்படம், அனைவருக்கும் பிடிக்கும்,'' என்றார்.நடிகர் சாம்ஸ் பேசுகையில், ''அறை எண் 305ல் கடவுள் திரைப்படத்தில், ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரம் பேசப்பட்டது. அதுபோல், இந்த படமும் பேசப்படும்,'' என்றார். நடிகை மதுமிதா பேசுகையில், ''நம்ம ஊரு சின்ன டைட்டானிக் படம் என்று, 'போட்' திரைப்படத்தை சொல்லலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை