உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேட்டுப்பாளையம் திருநெல்வேலி ரயில் வாரம் முழுவதும் இயக்க வலியுறுத்தல்

மேட்டுப்பாளையம் திருநெல்வேலி ரயில் வாரம் முழுவதும் இயக்க வலியுறுத்தல்

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் முகாம் அலுவலகத்தில், மத்திய இணை அமைச்சர் முருகனிடம் மேட்டுப்பாளையம் ரயில்நிலைய ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-கோவை - -மேட்டுப்பாளையம் மெமு ரயிலை, ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று முறைக்கு பதில் ஐந்து முறை இயக்க வேண்டும். மேட்டுப்பாளையம் -- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் அறிவிப்பை உடனடியாக துவங்க வேண்டும்.மேட்டுப்பாளையம்- - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் வாரம் ஒரு முறை இயக்கப்படுகிறது. பொதுமக்களின் நலன் கருதி, வாரம் முழுவதும் இயக்க வேண்டும். பாலக்காடு- - திருச்செந்துார் ரயிலை, மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க வேண்டும். ஊட்டி மலை ரயிலில் கூடுதலாக 5 பெட்டிகள் இணைக்க வேண்டும். இவ்வாறு, மனுவில்கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சங்கீதா, ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் சுபாஷ் சந்திர போஸ், சாந்தி, பாலசுப்ரமணியம், மதன மனோகரன், சூர்யநாதன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ