| ADDED : ஜூலை 03, 2024 09:20 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு - சொக்கனூர் செல்லும் ரோட்டில் மழை பெய்யும் நேரத்தில், சிங்கையன்புதூர் அரசு பள்ளி அருகே, மழை நீர் அளவுக்கு அதிகமாக தேங்குகிறது. இதனால், அவ்வழியில் செல்லும் மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.இந்த ரோட்டில் ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டுள்ளன. இங்கு மழை நீர் அதிகமாக தேங்கி நிற்பதால், குழி இருக்கும் இடம் தெரியாமல், வாகனங்களில் செல்லும் போது சிலர் தடுமாறுகின்றனர். சிலர் கீழே விழுந்து காயமடைகின்றனர்.மேலும், மழை நேரத்தில் ரோட்டை கடக்க பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி, ரோட்டில் மழை நீர் தேங்கும் இடத்தை நெடுஞ்சாலைத்துறை சார்பில் சீரமைக்க வேண்டும்.