உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுத்தையின் வேட்டைக்கு தொடர்ந்து ஆடுகள் பலி

சிறுத்தையின் வேட்டைக்கு தொடர்ந்து ஆடுகள் பலி

தொண்டாமுத்தூர்: கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட அட்டுக்கல், கெம்பனூர் பகுதியில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது.நேற்றுமுன்தினம் அதிகாலை, 2:30 மணிக்கு, கெம்பனூர் ரோட்டில் உள்ள ஒரு தோட்டத்திற்குள், சிறுத்தை புகுந்துள்ளது. அந்த சிறுத்தை, தங்கம் என்பவர் வளர்த்து வந்த ஒரு ஆட்டை கடித்து கொன்றுவிட்டு, அங்கிருந்து ஓடி விட்டது. நேற்று அதிகாலை, ஓணாப்பாளையம், சிறுவாணி ரோடு பகுதியில் உள்ள வெண்ணிலா என்பவரின் தோட்டத்தில், கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆடுகளை, சிறுத்தை கடித்து கொன்றது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், ஆய்வு செய்தனர். கேமரா பொருத்தி சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை