உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காய்கள் வரத்து அதிகரிப்பு விற்பனை விலையும் சரிவு

காய்கள் வரத்து அதிகரிப்பு விற்பனை விலையும் சரிவு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில் காய்கள் வரத்து அதிகரித்தும் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் விவசாயிகள் பலர், தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். தற்போது மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்துள்ள நிலையில், காய்கள் விலையில் மாற்றம் ஏற்பட்டு என, வியாபாரிகள் தெரிவித்தனர்.மார்க்கெட்டில், தக்காளி (15கிலோ) - 250, தேங்காய் ஒன்று -- 17, கத்தரிக்காய் கிலோ - 22, முருங்கைக்காய் - 30, வெண்டைக்காய் - 10, முள்ளங்கி - 25, வெள்ளரிக்காய் - 17, பூசணிக்காய் - 12, அரசாணிக்காய் - 12, பாகற்காய் - 15, புடலை - 15, சுரைக்காய் - 12, பீக்கங்காய் - 10, பீட்ரூட் -- 20, அவரைக்காய் - 35, பச்சை மிளகாய் - 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த வாரத்தை விட தற்போது அனைத்து காய்களின் விலையும் குறைந்துள்ளது.வியாபாரிகள் கூறியதாவது:கிணத்துக்கடவு மார்க்கெட்டில் கடந்த வாரத்தை விட, இந்த வாரம் காய்கறிகள் வரத்து, 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. வெளியூர் வரத்து குறைந்து, உள்ளூர் வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.மேலும், அனைத்து காய்களும், கிலோவுக்கு, 2 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விலை சரிந்துள்ளது. வரும் நாட்களில் விலை அதிகரிக்கும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி