பா.ஜ., இளைஞரணி சார்பில் ஆதார் சிறப்பு முகாம்
சூலுார் : பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை ஒட்டி, தபால் துறை மற்றும் சூலுார் நகர பா.ஜ., சார்பில் ஆதார் சிறப்பு முகாம் நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த முகாமில், புதிய ஆதார் அட்டை எடுத்தல், ஆதாரில் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணிகள் நடந்தன. இளைஞரணி நிர்வாகிகள் பிரசாந்த், ஹரீஷ், மானு, அஸ்வின், கவுதம், முகிலன், கோகுல் உள்ளிட்டோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று, ஆதாரில் திருத்தங்கள் மேற்கொண்டு பயனடைந்தனர்.