உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆடி கிருத்திகை அலங்கார பூஜை

ஆடி கிருத்திகை அலங்கார பூஜை

வால்பாறை; வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை நாளான நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. அதன் பின் காலை, 7:00 மணிக்கு பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களைக்கொண்டு அபிேஷக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. பக்தர்கள் பக்தி பாடல் பாடி வழிபட்டனர். உடுமலைஉடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் ஆடி கிருத்திகையொட்டி வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. கணபதி ேஹாமத்துடன் பூஜை துவங்கியது. தொடர்ந்து சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில் அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். மாலையில் வெள்ளி திருத்தேரில் சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியிலுள்ள முருகன் கோவில்களிலும் நேற்று பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை