உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மானியத்தில் வேப்பங்கன்று: வேளாண் துறை அழைப்பு

 மானியத்தில் வேப்பங்கன்று: வேளாண் துறை அழைப்பு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வட்டார விவசாயிகளுக்கு, மானியத்தில் வேப்பங்கன்றுகள் வழங்கப்படுகிறது. கிணத்துக்கடவு வேளாண் துறை சார்பில், மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியத்தில் வேப்பங்கன்றுகள் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 50 மரக்கன்றுகள் வழங்கப்படும். வேப்பங்கன்றுகள் வாங்க ஆர்வமுள்ள விவசாயிகள், 'உழவன்' செயலி வாயிலாக பதிவு செய்யலாம். அல்லது சிட்டா மற்றும் ஆதார் கார்டு நகல் போன்ற ஆவணங்களை வேளாண் விரிவாக்க மையத்தில் வழங்கி வேப்பங்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, வேளாண் துறை அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும். இத்தகவலை, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் தேவி மற்றும் வேளாண் துணை அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை