உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழமுதம் பருக வருமாறு அழைப்பு

தமிழமுதம் பருக வருமாறு அழைப்பு

கோவில்பாளையம் : கோவில்பாளையம், விவேகானந்தா மேலாண்மை கல்லூரியில், இன்று (13ம் தேதி) காலை 9:30 மணிக்கு, தமிழ்ச் சங்க விழா நடக்கிறது.விழாவில், தமிழாசிரியர் ரத்தினம் நடராஜன், 'அறிவு உரு ஆராய்ந்த கல்வி' என்னும் தலைப்பில் பேசுகிறார். 'படித்ததில் பிடித்தது,' 'அறிவோம் ஒரு அரிய செய்தி,' ஆகிய தலைப்புகளில் பேச்சாளர்கள் பேசுகின்றனர்.பெரிய புராணத்தில், குலச்சிறையார், கலிக்கம்ப நாயனார், மாணிக்கவாசகர் உள்ளிட்ட ஆறு நாயன்மார்கள் குறித்து புலவர்கள் பேசுகின்றனர். 'தமிழோடு விளையாடு,' என்னும் பேச்சரங்கம் நடக்கிறது. சான்றோர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.விழாவில் பங்கேற்று, தமிழமுதம் பருக தமிழ்ச் சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை