உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

 கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

பொள்ளாச்சி: ஆனைமலை அருகே, சர்க்கார்பதி கிராமத்தில் நடந்த சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமில், சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கால்நடைத்துறை சார்பில், கிராமங்களில், கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி செலுத்துதல், கறவை மாடுகள் பராமரிப்பு வழிகாட்டுதல் வேண்டி சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆனைமலை அருகே சர்க்கார்பதி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. கால்நடைத்துறை உதவி இயக்குனர் சக்ளாபாபு, தலைமை வகித்தார். கால்நடை டாக்டர்கள் ஜெயரவீனா, ரவிச்சந்திரன் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராமன் உள்ளிட்டோர் கால்நடைகளில் நோய் பாதிப்பை கண்டறிந்தனர். தவிர, குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்கம், சினை சரிபார்ப்பு உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு ஆலோசனையும் வழங்கப்பட்டது. மேலும், தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. சிறந்த கிடாரி கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு, ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி