உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அண்ணா பல்கலை கூடைப்பந்து; ஈஸ்வர் இன்ஜி. அணி சாம்பியன்

அண்ணா பல்கலை கூடைப்பந்து; ஈஸ்வர் இன்ஜி. அணி சாம்பியன்

கோவை; அண்ணா பல்கலை, 10வது மண்டல மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி, கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜி. கல்லுாரியில் இரு நாட்கள் நடந்தது. இதில், 11 அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதி போட்டியில், ஈஸ்வர் இன்ஜி. கல்லுாரி அணியும், இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி அணியும் மோதின. இதில், 60-24 என்ற புள்ளிக்கணக்கில் ஈஸ்வர் இன்ஜி. கல்லுாரி அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாம் அரையிறுதியில் இந்துஸ்தான் இன்ஜி. மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணியும், ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி. மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணியும் மோதின. இதில், 40-30 என்ற புள்ளிக்கணக்கில் இந்துஸ்தான் கல்லுாரி அணி வெற்றி பெற்றது. பரபரப்பான இறுதிப்போட்டியில், 71-51 என்ற புள்ளிக்கணக்கில், இந்துஸ்தான் கல்லுாரி அணியை, ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜி. கல்லுாரி அணி வென்று முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, கல்லுாரி முதல்வர் சுதா மோகன்ராம் பரிசு வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் விக்னேஷ் பரமசிவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை