உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாநில அளவிலான போட்டி அணி மேலாளர்கள் நியமனம்

 மாநில அளவிலான போட்டி அணி மேலாளர்கள் நியமனம்

கோவை: பள்ளி கல்வித்துறை சார்பில் கோவை வருவாய் மாவட்ட அளவில் குத்துச்சண்டை, சிலம்பம், டென்னிகாய்ட் ஆகிய விளையாட்டு போட்டிகள் புதிதாக நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாநில அளவிலான போட்டிகள் தேனி மாவட்டத்தில் ஜன., 4 முதல், 7ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்பவர்களின் வருகை பதிவு, தவறாது இருக்க வேண்டும். மாணவியரை வழிநடத்தும் பொருட்டு ஆறு உடற்கல்வி ஆசிரியைகளும், மாணவர்களை வழிநடத்தும் விதமாக ஐந்து உடற்கல்வி ஆசிரியர்களும் அணி மேலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக, உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி