உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் நுகர்வோர் கவனத்திற்கு

மின் நுகர்வோர் கவனத்திற்கு

பொள்ளாச்சி: மின்வாரியம், பொள்ளாச்சி கோட்டத்தில், மின் நுகர்வோர் வசதிக்காக ஜோதிநகர் பகிர்மான அலுவலகம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், ஏற்கனவே, ஜோதிநகர் பகிர்மானத்தில், இரட்டைப் படை மாதத்தில் கணக்கீடு செய்து வந்தது. தற்போது, ஒற்றைப்படை மாதத்தில் மின் கணக்கீடு செய்யப்படவுள்ளது. அதன்படி, இம்மாதம், மின் கணக்கீடு செய்யப்படவும் உள்ளது. மின் கணக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து, உரிய காலத்திற்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். இனிவரும் நாட்களில், ஜோதிநகர் மின்பகிர்மானங்களில் ஒற்றைப்படை மாதத்திலேயே மின் கணக்கீடு செய்யப்படவும் உள்ளது. இந்த தகவலை, மின்வாரிய பொள்ளாச்சி செயற்பொறியாளர் ராஜா, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை