| ADDED : டிச 04, 2025 06:39 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அறுவடை செய்யப்படும் வாழைத்தார்கள் தினசரி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கேரள வியாபாரிகள், உள்ளூர் வியாபாரிகள் அதிகளவில் வருவதால், வாழைத்தாருக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கிறது. கிணத்துக்கடவு மார்க்கெட்டில் நேற்று, செவ்வாழை கிலோ - 70, நேந்திரன், கதளி மற்றும் பூவன் -- -30, ரஸ்தாளி --- 40, சாம்பிராணி வகை வாழைத்தார் --- 45 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும், செவ்வாழை கிலோ - 25, பூவன் --- 15, ரஸ்தாளி --- 10 மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் --- 13 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த வாரத்தை காட்டிலும், நேற்று மார்க்கெட்டில் வாழைத்தார்கள் விலை அதிகரித்திருந்தது. மேலும், வரத்து குறைவாக இருந்தது. வெளியூர் வரத்து இல்லை. வரும் நாட்களில் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.