மேலும் செய்திகள்
பஸ் சக்கரம் ஏறியதால் மூதாட்டி படுகாயம்
26-Nov-2024
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டை கடக்க முயன்ற சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்தார்.கிணத்துக்கடவை சேர்ந்தவர் தேவிகா, 29. இவரது மகன் சரவணகுமார், 12, கடைக்குச் செல்ல கிணத்துக்கடவு ஸ்டேட் பேங்க் அருகே உள்ள சர்வீஸ் ரோட்டை கடந்துள்ளார். அப்போது அந்த ரோட்டில் அதிவேகமாக வந்த பைக், சரவணகுமார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.விபத்தில் காயமடைந்த சரவணகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தியவரை தேடுகின்றனர். இதற்காக, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
26-Nov-2024