உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூடைப்பந்து போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது கோவை

கூடைப்பந்து போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது கோவை

கோவை; மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில், கோவை ஏ, பி அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில், 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான, மாநில அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த மாதம் 29ம் தேதி முதல், நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நடந்து வருகிறது.இதில், 41 அணிகள் நேற்று வரை, லீக் முறையில் விளையாடின. திருச்சி அணி, 97-31 என்ற புள்ளிகளில், ராணிப்பேட்டை அணியையும், சிவகங்கை அணி, 38-18 என்ற புள்ளிகளில் தென்காசி அணியையும், கடலுார் அணி, 72-50 என்ற புள்ளிகளில், விருதுநகர் அணியையும் வென்றன.கோவை 'ஏ' அணி, 92-56 என்ற புள்ளிகளில் தேனி அணியையும், சேலம் அணி, 58-49 என்ற புள்ளிகளில் தஞ்சை அணியையும், கன்னியாகுமரி அணி, 63-48 என்ற புள்ளிகளில் திருநெல்வேலி அணியையும், கோவை 'பி' அணி, 79-65 என்ற புள்ளிகளில், சென்னை 'பி' அணியையும் தோற்கடித்தன.இன்றும், நாளையும் 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை