உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மீனவர்களுக்கு பரிசல் வழங்கினார் கலெக்டர்

மீனவர்களுக்கு பரிசல் வழங்கினார் கலெக்டர்

கோவை; மீன்வளத்துறை சார்பில் மானிய விலையில், மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், 15 மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்களை, கோவை கலெக்டர் வழங்கினார்.மீன்பிடி உபகரணங்கள் வாங்கும் மொத்த செலவில், 50 சதவீதம் மானிய உதவியாக வழங்கப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஈரோடுக்கு, 30 பரிசல்களும், திருப்பூருக்கு, 15 பரிசல்களும், கோவைக்கு, 15 பரிசல்களும், என மொத்தம் 60 பரிசல்கள் வழங்கப்படுகின்றன. ஒரு பரிசலின் மதிப்பு ரூ.18,500. இதில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும். பரிசல் வழங்கும் நிகழ்ச்சியில், மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர்ஜெய்லானி, ஆய்வாளர் பத்மஜா, சார் ஆய்வாளர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை