| ADDED : நவ 21, 2025 06:09 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு, வாழைத்தார் வரத்து குறைந்துள்ளது. கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், விவசாயிகள் தனிப்பயிராகவும், தென்னையில் ஊடுபயிராகவும் வாழை சாகுபடி செய்துள்ளனர். அறுவடை செய்யப்படும் வாழைத்தார்களை தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர். மார்க்கெட்டில் செவ்வாழை கிலோ - 75, நேந்திரன் --- 30, கதளி மற்றும் பூவன் -- 35, ரஸ்தாலி --- 45, சாம்பிராணி வகை வாழைத்தார் --- 47 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கடந்த வாரத்தை காட்டிலும் தற்போது செவ்வாழை, சாம்பிராணி வகை வாழைத்தார் --- 2 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. இதே போன்று, நேந்திரன் மற்றும் கதளி வாழைத்தார்கள் கிலோவுக்கு, 5 ரூபாய் விலை குறைந்துள்ளது. வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டில் நேற்று வாழைத்தார்கள் வரத்து, 50க்கும் குறைவாக இருந்தது. வெளியூர் வரத்தும் இல்லை. இதனால், சில வாழைத்தார் ரகங்கள் விலை அதிகரித்தும், சிலவற்றின் விலை குறைந்தும் இருந்தது. வரும் நாட்களில் வாழைத்தார்கள் விலை அதிகரிக்கும்,' என்றனர்.