108 ஆம்புலன்ஸில் பிரசவம்; பெண் குழந்தை பிறப்பு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஆம்புலன்ஸில், பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. பொள்ளாச்சி அருகே ஜல்லிப்பட்டியை சேர்ந்த சர்தார் என்பவரின் மனைவி ஷ்யாமலி,30 என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. தகவலின் பேரில் அவசர கால மருத்துவ நுட்புநர் கவிதா, ஓட்டுநர் நவீன்குமார் ஆகியோர் சமத்துார் 108 ஆம்புலன்ஸ் வீட்டுக்கு சென்றது. வீட்டில் இருந்து, ஆம்புலன்ஸில் ஏற்றும் போது வலி அதிகமாகியதால், பிரசவம் பார்க்கப்பட்டது. அவருக்கு, பெண் குழந்தை பிறந்தது.தாயும், குழந்தையும் பாதுகாப்பாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.