உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தினமலர் - பட்டம் இதழ் சார்பில் வினாடி - -வினா: ஸ்ரீ லதாங்கி வித்யா மந்திர் மாணவர்கள் அசத்தல்

 தினமலர் - பட்டம் இதழ் சார்பில் வினாடி - -வினா: ஸ்ரீ லதாங்கி வித்யா மந்திர் மாணவர்கள் அசத்தல்

பொள்ளாச்சி: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல் -- பரிசை வெல்' மெகா வினாடி --- வினா போட்டி, பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி ஸ்ரீ லதாங்கி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாணவர்களின் கற்றல் ஆர்வம் மற்றும் நுண்ணறிவு திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழ் 'பட்டம்' இதழ் சார்பில், மெகா வினாடி -- -வினா போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக் குழு மம் இணைந்து நடத்தும் வினாடி- - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன. இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணியினர், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப் போட்டியில் பங்கேற்பர். அவ்வகையில், பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி ஸ்ரீ லதாங்கி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வினாடி - வினா போட்டி நடந்தது.தகுதிச்சுற்றில், 120 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளி அளவில் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில், 'பி' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற, 8ம் வகுப்பு மாணவர் கபிலேஸ்வரன், மாணவி சன்சிதாவெங்கடேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாக இயக்குனர் ரிதன்யா, பள்ளி முதல்வர் ரேவதி, ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகப்பிரியா, சுனிதா, ஆசிரியர் சசிகலா ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மாணவர்களின் பொக்கிஷம் பள்ளி முதல்வர் ரேவதி பேசுகையில், 'தினமலர் - பட்டம்' இதழில், வெளியாகும் விளையாட்டு முறையிலான செயல்பாடுகள், பள்ளி மாணவர்களின் பொதுஅறிவை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள், நிகழ்கால நிகழ்வுகளை அறிந்து கொள்ளவும், ஆர்வத்துடன் ஆராயவும் ஊக்குவிக்கிறது. மாணவர்களுக்கு டிஜிட்டல் மற்றும் மாநில அளவிலான தளமாக திகழ்ந்து, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் அரிய வாய்ப்பை 'பட்டம்' இதழ் வழங்குகிறது, என்றார்.

தினமும் வாசிக்க துாண்டுகிறது!

மாணவர் கபிலேஸ்வரன்: 'பட்டம்' இதழ் செய்திகளை தொடர்ந்து படித்து வந்ததால், போட்டியில் வெற்றி பெற்றேன். 'பட்டம்' இதழில் பல்வேறு நாடுகளின் கலை மற்றும் கலாசாரம் குறித்து அறிந்தேன். இறுதி போட்டியில் வெற்றி பெறுவதற்காக என்னை தயார்படுத்தியும் வருகிறேன். 'பட்டம்' படிப்பதால், பொதுஅறிவு அதிகரிப்பதுடன், ஆர்வமும் அதிகரித்து வருகிறது. மாணவி சன்சிதா வெங்கடேஷ்: தொடர்ந்து, 'பட்டம்' இதழ் படித்து வருகிறேன். எங்களுக்கு பொது அறிவை மேம்படுத்துவதுடன் வாசிப்பு திறனை அதிகரிக்கச் செய்கிறது. 'பட்டம்' வாசிப்பதால், கல்வி திட்டத்துக்கு அப்பாற்பட்ட பல பொது விஷயங்களை அறிய முடிகிறது. இறுதி போட்டியில் வெற்றி பெறும் நோக்கில், அதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை