ரயில்வே கோட்ட மேலாளரே... கோரிக்கைகளை கவனியுங்க!
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வந்த, பாலக்காடு கோட்ட மேலாளர் அருண்குமார் சதுர்வேதியிடம், முன்னாள் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜோதிமணி மனு கொடுத்தார்.அதில், கூறியிருப்பதாவது: பாலக்காடு - எர்ணாகுளம் மெமு ரயிலை பொள்ளாச்சியில் இருந்து இயக்க வேண்டும்; போத்தனுார் - மேட்டுப்பாளையம் மெமு ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும். அமிர்தா விரைவு ரயிலை, ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும். ஏற்கனவே அறிவித்த வாரம் இருமுறை மங்களூர் - ராமேஸ்வரம் விரைவு ரயிலை உடனே இயக்க வேண்டும். மயிலாடுதுறை - பாலக்காடு வரை இயக்குவதாக அறிவிக்கப்பட்ட ரயிலை, ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அறிவித்து, சோதனை ஓட்டம் நடத்திய பெங்களூரு - பொள்ளாச்சி -- பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை உடனடியாக இயக்க வேண்டும். துாத்துக்குடி, மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரயில் அனைத்து நாட்களிலும் இயக்க வேண்டும். * பொள்ளாச்சி ரயில்வே சந்திப்பில், கூடுதலாக இரண்டு ரேக்குகள் அமைக்க வேண்டும். ஆனைமலை ரயில்வே ஸ்டேஷனில், கூட்ஸ் யார்டு அமைக்க வேண்டும்.இவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.