மேலும் செய்திகள்
இன்றுடன் கெடு நிறைவு; இன்னும் கொடி பறக்குது!
21-Apr-2025
கோவை; ஐகோர்ட் கொடுத்த அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில், கோவையில் எந்தவொரு இடத்திலும், மாநகராட்சி நிர்வாகம் கொடிக்கம்பங்களை அகற்ற வில்லை. தாமாக முன்வந்து அகற்றிக் கொள்வதாக உறுதியளித்த தி.மு. க.,வும் இதுவரை அகற்றவில்லை.தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப்., 21க்குள் அகற்ற ஐகோர்ட் அறிவுறுத்தியது. அதன்படி, அந்தந்த நகரங்களில் உள்ள கொடிக்கம்பங்களை தாமாக முன்வந்து அகற்றுவதற்கு தி.மு.க., பொது செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தியிருந்தார்.ஐகோர்ட் கொடுத்திருந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. அவ்வாறு அகற்றாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் எனவும் உத்தரவிட்டிருந்தது.அதன்படி, கொடிக்கம்பங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் எவ்வித முனைப்பும் எடுக்கவில்லை.மாநகராட்சி நிர்வாகமோ, அரசியல் கட்சிகளுக்கு கடிதம் மட்டும் எழுதி விட்டு, அமைதியாக இருந்து விட்டது.நகர் பகுதியில் எங்கெங்கு கொடிக்கம்பங்கள் இருக்கின்றன; அரசியல் கட்சிகள் சார்ந்தவை எத்தனை, ஜாதி அமைப்புகள், தொழிற்சங்கங்கள் சார்ந்த கொடிக்கம்பங்கள் எத்தனை என்கிற கணக்கீடு கூட எடுக்கப்படவில்லை. கட்சி தலைமை கூறியிருப்பதால், நாங்களே முன்வந்து, கொடிக் கம்பங்களை அகற்றி விடுவோம் என தி.மு.க., நிர்வாகிகள் கூறியிருந்தனர். அதன்படி, தி.மு.க.,வினரும் கொடிக்கம்பத்தை அகற்றவில்லை.இதுதொடர்பாக, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினரிடம் கேட்ட போது, 'ஐகோர்ட் அளித்த அவகாசம் இன்றுடன் (நேற்று) முடிகிறது. நாளை (இன்று) முதல் கொடிக்கம்பங்களை அகற்றும் பணியை மாநகராட்சி மேற்கொள்ளும்' என்றனர்.
21-Apr-2025