உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.பொள்ளாச்சி கோட்ட அளவிலான, மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நாளை, 9ம் தேதி காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது. பொள்ளாச்சி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மின்நுகர்வோர்கள் பங்கேற்று, தங்களது மின் துறை தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை, செயற்பொறியாளர் ராஜா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி