உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தாமதித்த பர்னிச்சர் நிறுவனம்  இழப்பீடு வழங்க உத்தரவு

தாமதித்த பர்னிச்சர் நிறுவனம்  இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை; கோவை, வடவள்ளியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், தனது வீட்டில் தானியங்கி கதவு பொருத்துவதற்காக, கணபதியிலுள்ள எஸ்.கே.ஸ்டீல்ஸ் பர்னிச்சர் நிறுவனத்தை தொடர்பு கொண்டார். தானியங்கி கதவுக்கு, 70,000 ரூபாய் செலவாகும் என தெரிவித்தனர். இதற்காக, முன்பணமாக, 53,000 ரூபாய் செலுத்தினார். கதவு பொருத்த பொருட்கள் கொண்டு வந்தனர். பல மாதங்களாகியும் வேலை ஆரம்பிக்காமல் கிடப்பில் போட்டனர். இதனால் 'அட்வான்ஸ்' பணத்தை திருப்பி கேட்ட போது, கொடுக்க மறுத்தனர். இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'பர்னிச்சர் நிறுவனம் , 'அட்வான்ஸ்' தொகை 53,000 ரூபாயை திருப்பி கொடுப்பதுடன், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !