உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சக்தி மாரியம்மன் கோயிலில் பிரம்மாண்ட கோலங்கள்

 சக்தி மாரியம்மன் கோயிலில் பிரம்மாண்ட கோலங்கள்

பெ.நா.பாளையம்: மார்கழி மாத உற்சவத்தையொட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் சக்தி மாரியம்மன் கோயிலில் தினசரி காலை, 5:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. சக்தி மாரியம்மன், தினசரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். கோயிலின் முன்புறம் பெண்கள் தினசரி பிரம்மாண்ட கோலமிட்டு வருகின்றனர். கோயிலின் முன்பு நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை நினைவு படுத்தும் வகையில், 15 அடி நீளம், 10 அடி அகலத்தில் தீப அலங்காரத்தில் பெண்கள் கோலமிட்டனர். அவர்கள் கூறுகையில்,' மார்கழி முழுவதுமே பிரமாண்ட கோலம் வரைய திட்டமிட்டுள்ளோம். காலை, 4:00 மணிக்கு தொடங்கி, 5:00 மணி வரை கோலமிடுகிறோம். இதனால் ஆன்மிக உணர்வு மேம்படுகிறது. வீட்டு குழந்தைகளையும் கோலம் போட வைக்கிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி